மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 8 அக்டோபர், 2013

விலைமாது

மங்கிய விளக்கொளியில்
மங்கலாய் ஒரு உருவம்..!
ஆடைகளைப் பற்றிய
கவலையின்றி
பொறுக்கினாள்...
விலகிச் சென்றவன்
விட்டுச் சென்ற
சில்லறைகளை..!

உடம்புக்கு ஓய்வு
தேவைப்பட்ட போதும்
அடுத்தவனின் பசி தீர்க்க
தயாரானாள் தவிப்போடு...

வந்தவன் புதியவனா...
அறிமுகமானவானா...
யாராக இருந்தால் என்ன..?
பணமே பிரதானம்...

யோசிக்க மனமின்றி
பூஜைக்கு ரெடியானாள்...

(மீள் பதிவு)
-'பரிவை' சே. குமார்

3 எண்ணங்கள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

மனதை நெகிழச் செய்யும் கவிதை..

Unknown சொன்னது…

ஹூம்...................!

ஸ்ரீராம். சொன்னது…

பூஜைக்கா நிவேதனத்துக்கா குமார்? நன்றாக இருந்தது.