மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

சிறு பூக்கள்...





ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

*****



தாலாட்டு..!
சந்தோஷ தூக்கம்
குழந்தைக்கு...
பழைய நினைவுகளை
திரும்பிப் பார்த்த
சோகத்தில் தாய்..!

*****



நேற்று முதல்   
காணவில்லை காற்றை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

*****




உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..! 

- கிறுக்கலில் கிறுக்கியது மீள்பதிவாக மீண்டும்....

-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்: