மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 18 டிசம்பர், 2012

காதல் நெஞ்சம்



முன் எப்போதும் இல்லாமல்
இப்போதெல்லாம்
கோபம் கொள்கிறாய்...

எப்போதும் சீண்டிப் பார்க்கும்
உன்னை இப்போதெல்லாம்
சீறலோடுதான் பார்க்க முடிகிறது....

தாமதமாக வீட்டில் நுழைந்தால்
யார் கூட சுத்திட்டு வாறே...
என்ற வார்த்தை அம்புகள்
தைக்கும் போது

காத்திருந்து காதலித்த
நாட்கள் கண் முன்னே
காட்சியாய் விரிந்து மரிக்கிறது...

எது செய்தாலும்
என்ன இது என்ற
ஒற்றை வார்த்தையில்
சிரித்து ரசித்த நாட்கள்
மழை நேரத்து
மண்வாசனையாய்
மனசுக்குள் நுழைந்து
கண்களில் இறங்குகிறது ...

முத்தம் கிடைக்காமல்
முயன்றும் முடியாமல்
தவித்த போது
ஒரு முத்தம் வாங்க
காத்திருந்த நேரத்தில்
பல முத்தங்கள் பெற்ற
சந்தோஷ தருணத்தை
மீட்டிப்பார்த்து ஆறுதல்படுகிறது
முத்த எச்சம் எதிர்பார்த்த கன்னம்...

அப்போது கிடைத்த சந்தோஷம்
இப்போது கனவாகிப் போச்சு...
எப்போதும் எதாவது
ஒன்றால் நீ சாடும் போது
காதலித்தது தவறோ
என்று மனசில் தோன்றி
மறைந்தாலும்
காதல் நெஞ்சில்
நீ இன்னும் பூவாகத்தான்
பூத்திருக்கிறாய்...

-'பரிவை' சே.குமார்

3 எண்ணங்கள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக மிக அருமை
சொல்லிச் சென்ற விதமும் முடிவும்
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு...

காதலில் எல்லாமே அழகு...

r.v.saravanan சொன்னது…

எப்போதும் சீண்டிப் பார்க்கும்
உன்னை இப்போதெல்லாம்
சீறலோடுதான் பார்க்க முடிகிறது....

அருமை